Friday 19 September 2014

காதல் அலையாய்...

காதல் அலையாய் ...

"முன் ஆறு,
மண்ணில், நீ ..
விதைத்தவன் 
விதையானான் ..!
கலங்கிய 
கண்மணியாய், 
நெஞ்சில் சுமந்து 
காதலி யானாய் ..!
வேதம் மாறும் 
நிசப்தங்களில் ,
காதலை இழந்தாய்  நீ ..!
காலம் போட்ட  
தாளத்தால்,
கரம் மாற நின்றாய் நீ ..!
நிற்கும் நாழிகைகளில் 
நின் பாதம் வலித்திடவே 
அமர்ந்தாய் நீ ..
கலங்கிய நதியாய் ..!
"காதில் கேட்டவன், 
காதல் கொண்டான்
வேதம் மாறும் 
காதலை, 
காதல் அலையாய் 
அள்ளி தருவாயென ....!

காதலுடன் 
♥SenthilBalaji♥ 

Thursday 18 September 2014

காலங்கள் :-)

   
காலங்கள் :-) 

    சில ஆண்டுகள் கழித்து, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் வெள்ளைசாமி அய்யா அவர்களை "GVG" மைதானத்தில் சந்திக்க நேர்ந்தது, கல்லூரி படிப்பின் போது எனது முழங்கை அறுவை சிகிச்சை க்கு பின்பு அன்பு கூர்ந்து உடற்பயிற்சி சிகிச்சை அளித்தார். அவரது இந்த அறுபதை தாண்டிய வயதிலும்,ஒரு இருபது வயது இளைஞன் - ஐ போல் உடற்பயிற்சி செய்கிறார் . எனது லேசான தொப்பை யை பார்த்து இன்று,  இன்னும் ஒரு மாதத்திற்குள் தொப்பை யை (லேசான ) குறைக்கும் படி அன்புக் கட்டளை இட்டதோடு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வைத்து விட்டார்.கல்லூரி காலங்கள் கொடுத்த பொக்கிசங்களில் இதுவும் ஒன்று. மீண்டும் ஒரு முறை அதே கல்லூரி இல் , அதே வருடத்தில் , அதே நட்பு வட்டங்கள் மற்றும் ஆசிரியர் வட்டத்துடன் படிக்கும் காலங்களை கற்பனையில் கொண்டு வந்த போது மகிழ்ச்சியாக இருக்கிறது .   அன்புக்கு நன்றி . :-)

இவண்,
செந்தில்பாலாஜி .