Friday 25 July 2014


















♥♥
"நீ அழுகின்றாய் ...
உறங்கிக்கொண்டு இருந்த என்னை 
எழுப்புகின்றாய்..
இடியும் , மின்னலுமாய் ..,"

"சட்டென்று விழித்த நான் 
உடலை விட்டு 
உயிரை எடுத்து கொண்டு ..

விழுகின்ற மழைத்  துளிகளை 
கயிறாக திரித்து 
மேகத்தின் மேல் ஏறி ,

உனைக் காண்கிறேன் 
நீ சிரிக்கின்றாய் நிலவாய் ...."

உனது சிரிப்பை ரசிக்கின்றேன் ..
இனி உடலோடு என் உயிர் 
ஒட்டாது  என்பதை அறிந்தும் ...♥♥

காதலுடன் ..
♥S BALAJI♥

Tuesday 22 July 2014



 இப்படிக்கு நான் ,

" பதின் வயதில் படிப்பறியா 
பறவைகளாய் .."

" வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ,
பிட்டுக்கு மண் சுமந்தோம் ....!"

"நாங்கள் சுமந்த மண்ணும் , கல்லும்
எங்களை நெஞ்சோடு அணைத்து கொண்டது ..!"

" கல்லில் அறை கட்டிய எங்களுக்கு,
கல்லறை கட்டிவிட்டது ...!"

-- இப்படிக்கு நான் ....
கல்லறையில் எழுந்தவன்

( கட்டிட விபத்துகளில் இறந்த வட மாநிலத்தவர்க்கு சமர்ப்பணம் ..!)

By
Senthil Balaji.

 சின்னஞ் சிறு வயதினிலே 

"காலை வரும் முன் கூடையில் குவிந்தன நாவல் பழங்கள்.. கிழக்கு தோட்டத்து நாவல் மரத்தை சுற்றி , குருவிகளோடு குருவிகளாக நாங்களும் ../ ஆடி காற்றில் கோடை மழை யில் நனைந்து கொண்டு நாவல் பழங்களை சேகரிப்போம் ...

பள்ளிக்கு எடுத்து சென்று நாவல் பழம் அறியா நண்பர்களுக்கு சுவை ஊட்டிய அந்த காலங்கள் ...

ஆனால் இன்று அந்த கிழக்கு தோட்டத்து மரமும் இல்லை , சுவடுகளும் இல்லை .. 1 கிலோ நாவல் பழம் = 240 ரூபாயாம் ..

நினைவுகளுடன்
 SenthilBalaji♥



தெய்வத்திருமகள்: 
"அணுவாய் ஆயிரம் கோடி இல் வென்றது யாரை வெல்வதற்கு ..??"

by 
..செந்தில்பாலாஜி ..

Sunday 20 July 2014

♥மன யுத்தம்♥ :

மன யுத்தம் :

"எவர் கண்களுக்கும் தெரிவதில்லை , இந்த போரும் போர்க்களமும் ..உந்தன் காதலும் , காதல் கொண்ட என் மனமும் ..

காதலுடன்
S BALAJI

Friday 18 July 2014

♥ தீ♥

முதல் தீ யை 
பற்ற வைத்தாய் ..
இன்று வரை 
காதல் "ஈ" (காதலி) யாய் 
மொய்க்கின்றாய் என் மனதில் ..

முழுவதும் எரியும் முன்,
என் முன் வாராயோ ???

காதலுடன் 
♥S BALAJI♥