Sunday 29 November 2015

இவளின் குருதி கொடை ..

சரியாய் 
இருபத்தி எட்டாவது நாளில் ..

குருதிக் கொடைக்கு 
காத்திருக்கின்றது 
அந்த பாவைகள்  .,!

முகத்தில் 
புன்சிரிப்பு தான் என்றாலும் ,
புண் சிரிப்பென்று 
யாரும் அறிலர் .,! 

மூச்சு நிற்கும் 
அந்த மூன்று நாள் 
குருதிக் கொடையில் ,
இடை நழுவி 
தரையில் விழும் 
வலிகளையும் 
யாரும் அறிலர்..! 

படைத்தவன் 
படைப்பதற்கு 
பாவமாய் 
அந்த "பாவைகள் "..

ஆனால், 
பாக்கியம் என பாவைகள் நிற்க, 
படைத்தவனே மண்டியிட்டு 
தலை வணங்குகிறான் ..
பாவைகளிடம் ...!!

நான் என்ன, பெரிய இவனா ????

பெண்மையை போற்றுவோம் ..!!

இவண்  
செந்தில்பாலாஜி