லவ் பண்றவங்களுக்கு மட்டும் தான் "லிப்ட்" ங்க ...
கடைசி நாளப்போ என் வீட்டுகாரம்மா ரெண்டு கிலோ அரிசியும், இந்த வருஷம் வந்த புது புளி யும் வாங்கிட்டு வர சொன்னா கண்ணு, ஆனா வீட்டுக்கு போகறதுக்குள்ள மாரடைப்புல அவ தவுந்துட்டா கண்ணு ..! குரல் தழுதழுக்க அந்த 60 வயது பெரியவர் கண்களில் நீர் முந்தியது .
அலுவலக வேலையாக, அன்று அலுவலக நான்கு சக்கர வாகனத்தை நானே இயக்க வேண்டியதாயிற்று ., கோவை ராமநாதபுரத்தில் இருந்து கவுண்டம்பாளையம்-இல் ஒரு தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும். காந்திபுரம் பகுதி இல் பாலம் வேலை நடைபெற்று கொண்டு இருப்பதால் குறுக்கு வழி இல் செல்ல வேண்டும். எனக்கு வழி சரியாக தெரியாததால் ஒரு முதியவரிடம் வழி கேட்டேன் அந்த முதியவர், நான் உடன் வந்து வழி சொல்லுகிறேன் என்று இடது பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டார் .
நலம் விசாரித்தார் , நானும் நலம் விசாரித்தேன் .. அவர் மனைவி இன் நலம் விசாரிக்கையில் தான் இந்த சம்பவம் ... காதல் திருமணமாம்..
வண்டியை நிறுத்தி விட்டு தேநீர் அருந்தினோம்... அவர் மனதில் உள்ள காதலின் ஆழம் ..!!! என்னால் யூகிக்க முடியவில்லை ..
இவரை போலவே, ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் .. பாலக்காடு -இல் இருந்து நடுப்புணி வழியாக என் பைக் இல் வந்து கொண்டு இருந்தேன் . peak hours சமயங்களில் நான் எல்லோருக்கும் லிப்ட் தருவதுண்டு . அந்த பையன் நான் தர்கா (Dharga) வரை வருகிறேன் " என்று சொன்னான் .
சிறிது தூரம் சென்றதும் " தம்பி லவ் பண்றயானு கேட்டேன் ""
ஏன் சேட்ட ?? நு கேட்டான் ..
இல்ல நான் லவ் பண்றவங்கலதான் வண்டில ஏத்துவேன் ..இல்லைனா கீழ இறங்கி கொள்ளலாம் ., அதான் கேட்டேன் பா .. நு விளையாட்டாக சொன்னேன் ..
முதலில் தடுமாறியவன் , பிறகு ஆமாம் என்று சொல்லி கண் கலங்கி விட்டான் ..
எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தார்களாம் .. அந்த மாணவிக்கு அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகமாம் ,, தயிர் சாப்பாடு ரொம்ப பிடிக்குமாம் இன்னும் நெறைய சொன்னான் .. ஒன்பதாம் வகுப்பிற்கு அந்த மாணவி திருவனந்தபுரத்தில் இருக்கும் வேறு பள்ளிக்கு சென்று விட்டாளாம் ...
அம்மாணவி ஒன்பதாம் வகுப்பின் முதல் நாள் மட்டும் வரவில்லை என்று நினைத்தானாம் ஆனால் மாலை இல் அந்த மாணவி வேற பள்ளிக்கு மாற்று ஆகி விட்டது தெரிந்ததும் மனம் நொந்து விட்டானாம் ..
நான் நிறைய ஹிண்ட்ஸ் கொடுத்து ஆறுதல் சொன்னேன் ..
வண்டியை நிறுத்திவிட்டு டீ சாப்பிட்டோம் .. கேரளத்து பழ பஜ்ஜியுடன் ..
இந்த இருவரின் காதலிலும் காமம் சிறிதளவும் கலக்கவில்லை... ஆழமாக நேசிக்கிறார்கள் காதலை .. ♥மெய்சிலிர்த்தது♥ ...
தேநீர் சாப்பிடும் போது அந்த பெரியவர் " தம்பி உனக்கு கல்யாணம் ஆயிருச்சா .. இல்லேங்னா ..
லவ் பண்றயா ???
அந்த மாணவன், " சேட்ட நீங்க லவ் பண்றீங்களா ???"
மெல்லிய சிரிப்பு மட்டும், பதிலாக ...
By
♥SenthilBalaji♥