Sunday 29 November 2015

இவளின் குருதி கொடை ..

சரியாய் 
இருபத்தி எட்டாவது நாளில் ..

குருதிக் கொடைக்கு 
காத்திருக்கின்றது 
அந்த பாவைகள்  .,!

முகத்தில் 
புன்சிரிப்பு தான் என்றாலும் ,
புண் சிரிப்பென்று 
யாரும் அறிலர் .,! 

மூச்சு நிற்கும் 
அந்த மூன்று நாள் 
குருதிக் கொடையில் ,
இடை நழுவி 
தரையில் விழும் 
வலிகளையும் 
யாரும் அறிலர்..! 

படைத்தவன் 
படைப்பதற்கு 
பாவமாய் 
அந்த "பாவைகள் "..

ஆனால், 
பாக்கியம் என பாவைகள் நிற்க, 
படைத்தவனே மண்டியிட்டு 
தலை வணங்குகிறான் ..
பாவைகளிடம் ...!!

நான் என்ன, பெரிய இவனா ????

பெண்மையை போற்றுவோம் ..!!

இவண்  
செந்தில்பாலாஜி 






Wednesday 14 October 2015

இது தான் நரகமாம் ...



இது தான் நரகமாம் ...

அகோர சப்தங்களும்,
தீதிலை அரசுனும் 
கொதி கலன்களில் 
கூத்தாடுவார்களாம் ...

கட்டுக்கதையென கார்டூனில் 
பார்த்த வண்ணம் ., 
பூமியும் பிழையினால் 
பிறழ்கிறதாம்...

அச்சம் வேண்டாம் 
வெறும் கனவு தான் .....!!!!!

 By
SenthilBalaji...

Friday 18 September 2015

மன யுத்தம் :
"எவர் கண்களுக்கும் தெரிவதில்லை , இந்த போரும் போர்க்களமும் ..உந்தன் காதலும் , காதல் கொண்ட என் மனமும் ..
காதலுடன் 
S BALAJI





அடைக்கப்படும் அசைவுகள் ,
உச்சத்தை தொடும் போது,
அசைவுகள் மெல்ல ஆடுகிறது..,
"உளியில்.....",
அசைவுகள் சிலையில் அடைபடும் வரை...
நானும் ஒரு ரவி வர்மன் தான் 
என்னுள் உன்னை 
அழகாய் வரைகின்ற பொழுதுகளில் ..♥

பிடித்தது

















பிடித்தது 
smile emoticon
"தாய் சொன்ன தாலாட்டு ..
தலைமுறையா., தமிழ்மறையா ..,
முல்லையே கேளு ..
மூவேந்தர் பாட்டு ...
நீர் தூங்க , நிலம் தூங்க ..,
கொடி தூங்க ., செடி தூங்க ..
தென்றலே பாடும் பாவேந்தர் பாட்டு ..,
நிலா காயும் நேரம் தானே ,
மடி மீது தூங்க
பொற்சேவல் கூவும் வரையில் ..
கண் காணாமல்
ராக்கோழி கத்தும்
அர்த்த ராத்திரி ..
பூ மடல் மீது
பனி தூங்கும்
முள் மாதிரி ..
வாய் பக்கம்
தீபம் ஏற்றி
வாசல் வந்த
மின்மினி ..
இளம் காலை
குயிலும் கூவ
எழுப்பாதே
சின்னக் கண்மணி ..."
By
SenthilBalaji.

♥திருவள்ளுவரின் காதல் க(விதை) ♥♥:

திருவள்ளுவரின் காதல் க(விதை) :
குறள் :

"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் 
அஞ்சுதும் வேபாக் கறிந்து." 
பொருள் :
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
இவண்
செந்தில் பாலாஜி 

அவளிடம்
அதிகமாக பேச
துவங்கி உள்ளேன்.,
கோவப்படுவதில்லை ....
பசியாரியதை கேட்கிறேன்.....
அன்று என் கனவில்,
" தாலாட்டு
பாடியவளுக்கு,
நான் அழுத
ஒப்பாரிக்கு பின்..."
BySenthilBalaji


"புதைக்கப்பட்ட
கல்லறையில்
எழுந்து ...
முதுமை,
இளமை 
குழந்தையாக
கருவறை செல்கிறது
"கனவு"..
இவண் ,
செந்தில் பாலாஜி



நிலவுக்கு கை 
முளைத்து ,
பூமியில் எழுதப்பட்ட 
அழகிய கவிதை 
"அவள்" ...

♥SB♥
காற்றை ஆளும் 
இசை நீ ..♥



கலித்தொகையின் 
ஆறாம் பிரிவாய் 
"பால் வீதி "
அவள் விழிகளின் 
மௌன மொழிகளில் 
இருந்து ... 

♥SB♥
கோடி நட்சத்திரங்களில் ஒற்றை நிலவு  டி நீ ...♥
♥SB♥


















என்ன ஆனதென்று தெரியவில்லை ,
சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு
சற்றே தயங்குகிறான்,,
சந்திரனும் சாயும் காலத்தில்
சீக்கிரம் வந்து விடுகிறான் ...
இருவரையும்
கிழ மேற்கு திசைகளில்
ஒருசேர காண்கிறேன் ..
அவள் வீட்டு வாசல் கோலத்தில்
கார்த்திகை பெண்ணாக
கார்த்திகை தீபமிட வருவாள்,
ஒருவேளை ,
அவளைக் காண்பதற்காகவோ ????

கத்தி சண்டை கற்றுக்
கொண்டு இருக்கிறேன் .....
விண்மீன்களின் அடியாட்கள்,
மண்கல வீரர்களாய் ...
"மண்வெளி"க்கு புறப்பட
தயாராகி கொண்டிருக்கிறது
அந்த "மண்கலம்"...
பூமியினில் தங்களை விட
பிரகாசமாய் ஒன்று மின்னுவதை
ஆராய்வதற்காக...
மண்கல வீரர்கள் "அவளை"
களவாடி சென்றுவிட்டால் !!...!!
ஆதலால் ....
கத்தி சண்டை கற்றுக்கொண்டு இருக்கிறேன் .....
By
Senthil Balaji



விண்ணில் இருந்து
வழி மாறியதா ..
இல்லை,
நீரில் இருந்து 
தவறி வந்ததா ...??
இந்த மீன்கள்,
காற்றினில்
துள்ளி விளையாடுகிறது .....
என்னவள் கண்களில் ...
By
♥SB♥


வரும் காலம் :
வற்றிவிட்ட வியர்வைத் துளிகளும் 
வியர்வை அழுக்கேறிய தாலிக் கயிறும்
வானம் பார்க்கையில்,
மண்ணில் கசிகின்றது
இந்த உரம்பு நீர்.....
கனவில் ..
By
SB
சதை மூட்டைக்குள் 
சவமாய் கிடக்கிறது 
சொல்லப்படாத என் 
காதல் ..♥
எனது கண்களுக்கு 
"புன்னகைக்க "
சொல்லி கொடுத்தவள் ..♥

♥SB♥
   
     


  கோவை - பொள்ளாச்சி சாலை ., வாகனத்தை இயக்குவது என்பது இந்த சாலை யில் சற்றே சிரமம் தான் ., 40 km வேகம் தாண்டுவதில்லை நான் ..
மூன்று நாள் முன்பு இரவு 8 மணி இருக்கும் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து கிடந்தார் ., அருகில் சென்று பார்த்த போது தன் வண்டியில் சில அன்றில் பறவைகளையும் (love birds), வண்ண மீன்களையும் கொண்டு செல்லும் போது நெருக்கடி யான இடத்தில தவறி விழுந்து விட்டார்.. அவருக்கு ஒன்றும் இல்லை ... ..
நான் எனது வண்டியை நிறுத்தி விட்டு , பறவை கூட்டை பார்த்தேன் . ஒரு பறவையின் கால் கூண்டின் கம்பிகளில் சிக்கி அப்பறவை அசைவற்று கிடந்தது .,
சிறிது அதிர்ச்சி யுடன் நான் உற்று பார்கிறேன் ., கூண்டினுள் இருக்கும் ஜோடி பறவையும் அதே அதிர்ச்சி யுடன் ...
பறவையின் காலை கம்பி இன் இடுக்குகளில் இருந்து மெல்ல எடுத்தேன் ..
!!!!!!
!!!!!!!
நல்ல வேளை அப்பறவை பறக்க தொடங்கியது, அதிர்ச்சியுடன் இருந்த அந்த ஜோடி பறவை யுடன் சேர்ந்து காதலுடன் ...
by
SenthilBalaji..


இன்று நூறாவது நபரை .... smile emoticon
ஒன்னும் இல்லீங்க .. இப்பெல்லாம் டீ கடைல அரை கிளாஸ் க்கு டீ யும் , மீதி நொரை யும் தராங்க ,,, அதான் டீ கடைக்கு போனா " மாஸ்டர், டீ - ல நொரை இல்லாம , கிளாஸ் நெறையா ஒரு முழு டீ கொடுங்கநேனு", கடைசி ரெண்டு மாசமா கேட்டுட்டு இருக்கேன் .. இத கேக்கும் போது டீ மாஸ்டர் பாதி பேரு சந்தோசமா சிரிக்கறாங்க அப்பு ... அதான் இன்னைக்கு நூறாவது டீ மாஸ்டர் சிருச்சுபுட்டாரு.. வேற ஒன்னும் இல்லீங்க ...
SB ..

எத்தனை நாள் தவம் ??



எத்தனை நாள் தவம் ??

உனது நெற்றி
காது , இதழ்கள்
மற்றும்
கழுத்தை
தழுவுகிறது
"இம்மழை "..♥

♥SB♥

தவமி



கோடை தாகத்திற்கு 
உனது "முத்தங்களில்" 
தாகம் தீரும் என்றால் 
வெயிலை வேண்டி
தவமிருப்பேன் ...


♥SB♥

       

 "Small plants withstand with high velocity of wind nor flood, by means of it may turn in all dynamic positions but not yet rupture down, still towards to the top for their survival - human life".  SB smile emoticon

உந்தன் மூக்குத்தி 
வெளிச்சத்தை 
கிரகித்துக்கொள்ள 
காத்திருக்கின்றன 
நட்சத்திரங்கள் ..

♥SB♥


மழை தூரல்களில் 
நீந்துகின்றது 
உந்தன் கண் மீன்கள் ..♥

♥SB♥
என்ன சொல்ல வந்தாய் 
மழையாக ...♥
Nothing To Be Originated Everything To Be Derived...

♥SB♥
யாரை தூங்க வைக்க 
இந்த மழையின் 
தாலாட்டு ...!!

சப்தம்

விசித்திரமாய் 
அந்த சாலையின் 
இரைச்சல் சத்தங்களை 
மட்டும் கவனித்து வந்தேன் ..
பேரிரைச்சல் மத்தியில் 
அந்த "ஒற்றை பாதம்" 
மட்டும் அமைதியாய் ..

♥SB♥

இனித்தல் ..


"நான்கு நாள் முன்பு எனக்கு இரவு 11 மணிக்கு அழைப்பு வந்தது ..
ஹலோ யாருங்க ..?
தம்பி பாலாஜி ..
ஆமாங்க ... நீங்க ..?
நான் யார்னு எதுக்கு உனக்கு ., எனக்கு கல்யாணம் வெள்ளிகிழமை மதியம் மண்டபத்துக்கு வந்துரு ...
என்று உரிமையுடன் சொன்னார் ..
அந்த தொலை பேசி குரலை மூளையில் செலுத்தி யார் என்று பார்த்ததில் "கொடுவாய் சரவணா மெடிக்கல் சரவணன் அண்ணன் "
ஆச்சர்யத்து போனேன் .. 4 ஆண்டுகள் ஆகி இருக்கும் அவரிடம் பேசி .. அவரது திருமண அழைப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியது .. சில நேரம் அவரை கலாய்த்து விட்டு திருமணத்தில் பார்ப்போம் என்று கூறினேன் .

இன்று காலை கொடுவாய் க்கு பைக்கில் கிளம்பி , சரியாக மதியம் 1.30 மணி அளவில் அவினாஷி பாளையம் பக்கத்தில் உள்ள மண்டபத்தை அடைந்தேன்.
மேடைக்கு சென்று மணமக்களுக்கு திருமண வாழ்த்து சொன்னேன்.. வாழ்த்துக்கு நன்றியுடன் " உனக்கு எப்போ பாலாஜி கல்யாணம் ?" என கலாய்க்க ஆரம்பித்தார் மணமகன் ... வெட்கப்பட்டுக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கும் போது ..
எனது பள்ளி தமிழ் ஆசிரியர் திரு குமார் அய்யா அவர்கள் மேடை ஏறினார்கள் .. அதிசயித்துப் போனேன் மகிழ்ச்சி யுடன் வணங்கி இருவரும் நலம் விசாரித்தோம் ...
இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம் ..நிறைய பேசிக்கொண்டு இருக்கையில் பள்ளியின் தாளாளர் துரை ஜி அவர்களும் வந்தார் நலம் விசாரித்தோம் .. திருமண விழா விற்கு பின் பால்ய சிநேகிதர்களை சந்தித்து விட்டு மகிழ்ச்சியாக பொள்ளாச்சி வந்தேன் ... ஒரு மகிழ்ச்சியான நாளை அனுபவித்த மகிழ்ச்சியில் ..."""
--செந்தில்பாலாஜி ...
தமிழ் ஆசிரியர் திரு குமார் அவர்களுடன் ...

இன்னும் அந்த 
கடல் அலை 
கரை சேரவில்லை.. 
உனது கண்களை நோக்கி 
தவம் செய்ததிற்கு 
வதம் செய்கின்றாய் 
அதே கண்களில் ..♥
அந்த வானவில்லின் வண்ணங்களை திருடி விட்டாய் நீ....!!! 

♥SB♥
அந்த கண் மீனுக்கான 
தூண்டிலை 
சரி செய்கின்றேன் ..




காற்றின் ஒவ்வொரு துகள்களும் 
உனது இதய கூட்டினுள் 
உறங்க 
சண்டை இடுகின்றன, 
நானும் ...!
இரவின் மௌனத்தை 
முறியடிப்பாயோ 
உனது முத்தங்களில் ..!!!!
விழி ஈர்ப்பு விசையை கணக்கிடாமல் சென்றானோ, அந்த நியூட்டன் ....
காதலுடன்.. 
செந்தில்பாலாஜி 



ஆயிரம் லட்சம் 
சிறகுகளை அக்னியில் 
பறக்கவிட்டு...., 
அமைதியாய் உறங்குகிறது 
இந்த ஒற்றை இறகு,
அக்னி சிறகாய்....

பிரார்த்தனை ::



பிரார்த்தனை ::

வனமாண்ட ராமன் 
நாடாள வார ..
மண்ணிழந்த பாண்டவன் 
படை சூழ்ந்து
மீண்டு எழ ...
கருகிய காகிதம்
பச்சை மரமாய்
தழைத்து எழ ..
"கல்கி" அவதாரம் தாராயோ ...

கல்கி




கலியுகமென நீ 
பயந்தால் ....
எனது முதுகிற்கு 
பின்னால் மறைந்து கொள் .,
கூடுதலாக கண்ணனிடம் 
புதிய கீதையை எழுதி
வாங்கி தருகின்றேன் .,
அர்ஜுனனிடம் வில் அம்பை
வாங்கி தருகின்றேன் .,
நீ "கல்கி" அவதாரம் தாராயோ ....

--செந்தில்பாலாஜி.

Tuesday 8 September 2015
























நீ ஏன்
கால் நனைத்தாய் 
கடல் நீரில் ..?

தவமாய் தவமிருந்து 
காற்றினில் கலக்கின்றது.... 

உன்னை பார்பதற்கு 
மழைத் துளிகளாய் ..

♥SB♥

Thursday 27 August 2015

பயணம் •◘○♦♣♠☺☻♥























பயணம் •◘○♦♣♠☺☻♥

கடவுளின் கழுத்தில் 
சில நேரம் 
தீப ஆராதனை பெறுகிறது 
ஒரு பணத்தால் ஆன மாலை.,
சில மணி துளிகளில் ....
செல்வந்தனிடம் ,
சில மணி துளிகளில் 
கணிகையின் காசு பைகளில் ..
சில மணி துளிகளில் 
யாசிப்பவரிடம் ..
என 
மண்ணுக்குள் புதைபவன் வரை 
அர்ச்சிக்கப்பட்ட அந்த 
பணத்தின் பயணம்.... 

Tuesday 25 August 2015

அநேகமாக இதுவே 
இறுதி சந்திப்பென 
நினைக்கின்றேன் ...
ஆனால் அவளிடம் 
அவள் "மூக்குத்தி "
பற்றி ஏதும் சொல்லவில்லை...
அழகுக்கு அழகு சேர்க்கிறது என ..

Wednesday 19 August 2015

அழகியலே .. ♥

  
அழகியலே .. ♥



  மிகவும் பிடித்தமானவர்களிடம் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை .. ஆம் இந்த தோழியிடம் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள 20 நிமிடங்கள் காத்திருந்தேன் ..!
பெயர் : "கனல்மதி "
"இப்படிக்கு மழை" என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர் . ஒன்பதாம் வகுப்பு மாணவி . ஆச்சரியப்பட வேண்டாம் .. !!!!!!
   ஆம் சென்ற சனிக்கிழமை அதிகாலை 2 மணி க்கு தான் வீட்டுக்கு சென்றேன் . அடுத்த நாள் காலை 9 மணிக்கு பொள்ளாச்சி இலக்கிய வட்ட விழா. நான் எழுந்தது காலை 9.15 மணிக்கு . அவசரமாக கிளம்பி சென்றேன் .

      ஆனால் விழாவிற்கு மிக முக்கியமான நபர் வருவதற்கு சிறிது தாமதம் ஆகும் என கூறினார்கள் அதனால் 10.30 மணி அளவில் ஆரம்பம் ஆனது . மிக முக்கியமான நபரை காண நானும் காத்திருந்தேன் அப்படி யாரும் வரவில்லை.
 
     ஆனால் விழா ஆரம்பம் ஆனது , அந்த நபர் கனல்மதி தான் என்பது பின்பு தெரிந்தது.
     எட்டாம் வகுப்பு படிக்கும் போது தனது முதல் கவிதை தொகுப்பான "இப்படிக்கு மழை " என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். அப்போ இவர் எப்போது முதல் கவிதை எழுதி இருப்பார் என்ற கேள்விக்கு இது வரை எனக்கு  விடை தெரியவில்லை ..!!!!!
   இவர் விழாவில் பேச ஆரம்பித்தார். ஆம் இதுதான் எனது கண்மயிர்கள் சிலிர்த்த தருணம் . பக்குவப்பட்ட பேச்சாளரை போல (இவர் பக்குவப்பட்ட பேச்சாளர் தான் ) 5 நிமிடத்தில் உரையை முடித்து விட்டார்
   ஆம்  அப்படி என்ன பேச முடியும் ..
     குழந்தை பருவத்தில் எப்படி கவிதைகள் எழுத முடியும் என்ற கேள்விக்கு " நான் படித்து கொண்டு இருப்பது , அரசு பள்ளி தமிழ் வழி கல்வியில் , ஆக என்னால் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்க  முடிந்தது , மேலும் இந்த சமூகத்தை பற்றி எளிதில் புரிந்து கொண்டேன் என்றார் "  அனேக கைதட்டல்கள் ....
   இரண்டாவதாக "பெரியார் இயல்"  பற்றி பேசினார். 13 வயதில் பெரியாரை பற்றி தெரிவதே அறிது .. ஆனால் "பெரியார் இயல்" பற்றி பேசும் போது அந்த எளிமைக்கு உள்ள வலிமைகளை விளக்கி விட்டார்.
    மேலும் இவர் எழுதிய "இப்படிக்கு மழை " என்ற கவிதை தொகுப்பில் 4 அல்லது 5 கவிதைகள் தான் உருப்படியான கவிதையாம் ... அதை இவரே சொல்கிறார் .. ஏன்  என்றால் 5 கவிதைகள் தான் சமூகத்திற்கு  பயன் படுமாம். மீதி கவிதைகள் அழகியலை அழகாக கூறுமாம்.
 " ஒரு தலை சிறந்த சுய விமர்சனம் இது தான் .."

   ஆக இவருடன் ஒரு புகைப்படம் எடுத்து கொண்ட மகிழ்ச்சியில் நான் ...
 

   "இப்படிக்கு மழை" கவிதை தொகுப்பை பெற அழைக்கவும் : கவிஞர் கனல்மதி + 91 9842448175..

Monday 17 August 2015

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ...

  எதையோ பார்த்து ஆனந்த பட்டு  முதன் முதலில் சிரிக்கும் குழந்தையாய் .. சிரிக்கின்றேன்  உருமீனாய் உளமாறிப்  போன நான் , முதல் கவிதையில் ...

  ஆனந்த பட்டு சிரித்து 5 மாதம் ஆன பின்பு இப்போது தான் சிரித்ததை எழுத துவங்குகிறேன் நான் ..

  ஒரு (சிறந்த) படைப்பு என்பது ஒட்டு மொத்த உலகையோ அல்லது ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கு , வெற்றிக்கு , உயிர்த்தலுக்கு.. உதவுமெனில்  சான்றே வேண்டாம் ,. அது தலை சிறந்த படைப்பு தான் .!




   ஆம் , உயிர்த்தலுக்கு உதவும் கவிதை கண்டறியப்பட்டால்  அப்பக்கத்தை மடித்து விடுவது என முடிவு செய்தேன் .. தொகுப்பை படித்து முடித்து பார்க்கும் போது, மடிக்கப்படாத பக்கங்கள் பத்தை தாண்டவில்லை .! 

  ஒரு கவிஞனின் மூளைக்குள் கவிதைகள் எவ்வாறு தோன்றியது , ஏன் தோன்றியது, எதற்காக தோன்றியது அந்த கவிதைகள் எழுதப்படும் போது அந்த  பேனா முனை எவ்வாறு தன்னை அர்ப்பணித்து கொண்டது என்பதை சிந்திக்க தூண்டுகிறது .

         " ரௌதிரங்களை உள்ளடுக்கி, ஏக்கங்களை உள்ளடுக்கி,.நம்பிக்கையை உள்ளடுக்கி ,நினைவுகளை உள்ளடுக்கி, இழப்புகளை உள்ளடுக்கி, நீதிகளை உள்ளடுக்கி , காதலை உள்ளடுக்கி,
உண்மைகளை உள்ளடுக்கி ," பறக்க எத்தனித்த இந்த ஒற்றை இறகு, என்னையும் ஏற்றிக்கொண்டு  ஆனந்தமாய் பயணித்து கொண்டு இருக்கின்றது ..  

"ஒரு தனிமையை 
இனிமையாக மொழி 
பெயர்க்க தெரியாதவன் 

ஒரு வலியை 
அதன் போக்கிலேயே 
ஆளத்தெரியாதவன் 
ஒரு துரோகத்தை 
துடைத்து விட்டு 
கடந்து வராதவன் 

வெறுப்புகளின் மேல் 
நிம்மதியாய் 
படுத்துறங்க பழகாதவன் 

தாரளமாகத் 
தூக்கு போட்டுக் 
கொள்ளலாம் 
என்கிறேன் நான் 

ஆனாலும் அவன் இன்னும் 
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான் .."

ஒற்றை இறகினில் என்னை பறக்க வைத்த தொகுப்பின் ஆசிரியர் "இரா . பூபாலன்" அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் .. :-) 

Monday 10 August 2015

என திதழ்களை நீ நகல்கள் எடுப்பாயோ உனது முத்தங்களில் ...♥♥

♥SB♥

Friday 7 August 2015

 வெட்கப்பட்டு விலகி செல்கின்றன இந்த காற்றின் துகள்கள்,, ஒரு முத்தத்திற்கான இடைவெளியில்.... ♥+♥ 

♥செந்தில்பாலாஜி ♥

Sunday 2 August 2015

தேவதையாய் ...






தேவதையாய் ...
நீ எந்த  கோலமிட புள்ளிகள் வைத்தாய்.,?
வானத்தில் புள்ளிகளாய் நட்சத்திரங்கள்...!!! 

By 
SenthilBalaji..♥♥

Thursday 16 July 2015

நீ ..














நெற்றிப் பொட்டு வைத்த 
 உனது முகத்தில் .,
 நேர்ப்பொட்டை நான் 
 வைக்கும் வைபவத்தில்., 
  நீ  வெட்கப்பட்டு நிற்கும் போது ..
 நட்சத்திரங்களே கீழ் உதிர்ந்து 
 வாழ்த்துகளை கூறுமாம் ., ...

காதலுடன் 
♥SB♥

Monday 29 June 2015

வைஸ் வெர்ஸா (Vice Versa):

வைஸ் வெர்ஸா (Vice Versa):
 
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ":

    மன்னர் காலத்தில், அரசாங்க வேலை என்றால் அது மன்னரின் அரண்மனை யில் வேலை, சிறை வாசம் என்றால் அது ராஜ தண்டனை . காலம் மருவியதால் அரசு  வேலை எனவும்  சிறை வாசம் எனவும் ஜோதிடத்தில் மருவியது .

     சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பிறந்தோர்களின் ஜாதகத்தில் , "சுக்கிரன். புதன் , சந்திரன் , சூரியன் ) பெரும்பாலோனோர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது என்பது அரிது . 

சுக்கிரன் , ' அழகு , ஆடம்பரம் ,சினிமா , சொகுசு வாழ்கையை " குறிப்பவர் ,.
புதன் , " கல்வி , வித்தை , பட்ட படிப்பு, ஜோதிடம் , நவக்ரஹ வழிபாடு  " ஐ குறிப்பவர் . 
சந்திரன் " தாய் , கடல் கடந்த தொழில் , வெளிநாடு மற்றும் வேற்று மொழி " ஐ குறிப்பவர் .
சூரியன் " தந்தை , ராஜ சௌக்கியம் , அழகு " ஐ குறிப்பவர் .

 ஆக 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஜாதகத்தில் மேற்கூறப்பட்ட க்ரகங்கள் நல்ல நிலையில் இருந்தால், ஜோதிடர் இந்த ஜாதகன் யோகக்காரன் சொகுசான வாழ்கை , வெளிநாடு வாழ் யோகம் " என கூறுவார் .

 ஆனால் இன்று சற்றே யோசித்து தான் பலன் கூற வேண்டும் . இன்று பிறக்கக் கூடிய ஜாதர்கள் ஜாதகத்தில் மேற்கூறப்பட்ட க்ரகங்கள் நல்ல நிலையில் அதிகளவில் இருக்கின்றன ,.

  அதனால் தான் திரை துறையில் ஜெயிக்க வேண்டும் என்று இளைஞர்கள் பட்டாளமும் , பொறியியல் , மருத்தவம் பட்ட படிப்பு , நவக்ரஹ வழிபாடு இன்  முக்கியத்துவம் , வெளிநாடு வேலை மற்றும் மோகம் , என மக்களின் எண்ண அலைகளும் வேறுபட்டு விட்டது .

  ஏன் இந்த கட்டுரையை எழுதி கொண்டு இருக்கும் நான் கூட வணிகர் குலத்தில் பிறந்தவன் தான் .

எல்லாம் சரி, 90/100 சதிவிகிதம் ஜாதர்கள் மேற்கூறிய அமைப்பில் பிறந்தால் அனைவருக்கும் வேலை, தொழில் மற்றும் சொகுசு வாழ்க்கை கிடைத்து விடுகிறதா என்ன ??? 

  மேற்கூறிய க்ரகங்கள்  நல்ல நிலையில் இருந்தால் இன்று இது தோஷம் உடைய ஜாதகம் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது .

இன்ஜினியரிங் படித்தோருக்கு வேலை இல்லையாம் கூட மணமகள் கிடைப்பது அறிதாம் ..!!

மருத்துவ படிப்புக்கும் இதே நிலைமை சிறிது தூரத்தில்....

பட்ட படிப்பு படித்தவர்களின் நிலை ...??? 

அப்போ 40 ஆண்டுகளுக்கு முன் , விவசாயத்தை குறிக்கும் சனி நல்ல நிலையில் இருந்தார் . அதனால் தான் விவசாயம் செழித்தது .
இனி நம் நாடு எதிர் கொள்ள இருக்கும் விவசாய புரட்சிக்கு சனி நல்ல நிலையில் உள்ள  ஜாதர்கள் அதிக அளவில் தேவைபடுவார்கள் மற்றும் உடல் உழைப்பை கொடுப்பவர்கள் யோககாரர்கள் என்பது மட்டும் உறுதி..

வைஸ் வெர்ஸா ..(Vice Versa) 
காலம் மருவியதால் .. ஜோதிடம் மீண்டும் மருவும் ...

நன்றிகளுடன் 
செந்தில்பாலாஜி DME.,