பயணம் •◘○♦♣♠☺☻♥
கடவுளின் கழுத்தில்
சில நேரம்
தீப ஆராதனை பெறுகிறது
ஒரு பணத்தால் ஆன மாலை.,
சில மணி துளிகளில் ....
செல்வந்தனிடம் ,
சில மணி துளிகளில்
கணிகையின் காசு பைகளில் ..
சில மணி துளிகளில்
யாசிப்பவரிடம் ..
என
மண்ணுக்குள் புதைபவன் வரை
அர்ச்சிக்கப்பட்ட அந்த
பணத்தின் பயணம்....
0 comments:
Post a Comment