Thursday 10 March 2016

நாதிகள் :

நாதிகள் :

"புணர்தலுக்கு 
 பிறப்பு 
சான்றிடுகையில் ..,"

"பிறப்புக்கு 
பின் 
வளர்தலில், 
பாலினம் 
சான்றிடுகையில் ...,"

"வளர்தலில் 
உடலொன்றாய் ,
உயிர்வேறாய் 
உளம் கூறாய் 
பிளக்க,
 
நெஞ்சோடு நீட்டிய 
முலையும் 
மார்போடு மடிந்து போக, 
யோனிக்குள் 
லிங்கமென 
விசித்திரமாய் 
விளம்பி.,
 
புணர்தல் புரியாமல் 
புரிதல் புணராமல், 
அர்த்தமற்ற நாதிகளாய் ..
வீதிக்கு வரும் 
அந்த 
அர்த்தநாரிகளுக்கும் 
அர்த்தம் 
கொடுப்போம் .,
ஒரு சக மனிதனாய் ...! 

இவண் 
♥செந்தில்பாலாஜி ♥


Attachments area
Preview attachment transgender.jpg