♥
என்ன ஆனதென்று தெரியவில்லை ,
சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு
சற்றே தயங்குகிறான்,,♥
சந்திரனும் சாயும் காலத்தில்
சீக்கிரம் வந்து விடுகிறான் ...
இருவரையும்
கிழ மேற்கு திசைகளில்
ஒருசேர காண்கிறேன் ..
அவள் வீட்டு வாசல் கோலத்தில்
கார்த்திகை பெண்ணாக
கார்த்திகை தீபமிட வருவாள்,
ஒருவேளை ,
அவளைக் காண்பதற்காகவோ ????♥♥
0 comments:
Post a Comment