Saturday 23 May 2015








 சின்னஞ்சிறு வயதினிலே :-)

குல்பி  : 
           
    சாய்ங்காலம் ஸ்கூல் ல இருந்து  வந்ததும் சைக்கிள் டயர் வண்டி ஓட்டிட்டு ஊற ஒரு ரௌண்டு வந்துட்டு தான் மத்த வேல ..  ராத்திரி 8 மணி வரைக்கும் விளையாடுவோம்  வேர்வை  நனஞ்ச சட்டய வீட்டுக்கு கொண்டு போனா அடி விழும் ... இதுல பக்கத்து ஊர் சூலக்கல் ல சினிமா சூட்டிங் அடிக்கடி நடக்கும் .. வீட்ல இருந்து சொல்லாம ஊர் பசங்க கிளம்புவோம் ! 

    " தேவர் மகன் " படம் இங்கதான் எடுத்தாங்கநு சிவாஜிகணேசன்  பையன்  பிரபு "பாஞ்சாலங்குறிச்சி"  படம் சூடிங்க்கு "ஒத்தபனைக்கு"  (பொள்ளாச்சி பக்கம் ) வந்தப்போ தாத்தா நெறைய சொன்னாரு ..  "சிலம்பாட்டம் " சூட்டிங் அப்போ, அய்யனார் செட் க்கு, பிரபு, சிம்பு கூட அதே இடத்துக்கு வந்தப்போ நினைவுள வந்துது ...

   இன்னும் சொல்ல போனா சந்தோசமான நாள்னா ஞாயித்துக் கிழமை தான் . பாட்டி துணி தொவைக்க ஆத்துக்கு போகும் . நாங்க எல்லோரும் மீன் புடுச்சு விளையாடுவோம் , மீன் குட்டிகல பாத்திரங்களில் போட்டு வழத்துவோம், பெருசாச்சுனா வீட்டு கிணத்துல போடுவோம். பாத்திரம் கழுவ கிணத்துல தண்ணி இறைக்கும் போது  மீன் குஞ்சுகள் வரும், அப்போ பாட்டி கிட்ட திட்டு வாங்கறது செமையா இருக்கும் .. 

    ஊருக்குள்ள நாலஞ்சு வீட்ல தான் டிவி இருக்கும் ,, புது படம் கேசட்ல போடுவாங்க பக்கத்து  வீட்ல ஊர் பசங்க அத்தன பெரும் அங்கதான் இருப்போம் .

     நொண்டி , கில்லி, குண்டாட்டம் , சீட்டு விளையாட்டு , ட்ரைன் ஓட்டி விளையாடறதுநு ஊரே அமர்க்களமா இருக்கும் . 

   இப்பெல்லாம் இந்த மாதிரியான "குழந்தைகள் "சூழ்நிலைக்கு சுவடே இல்லாம போயிருச்சு ..  சில நேரங்கள்ல இத நினைக்கும் போது என் அடுத்த தலைமுறைக்கு எதுவும் மிச்சம் வைக்கலைன்னு கஷ்டமா இருக்கும் . 

ஆனா ரெண்டு வருசமா இந்த சுவடுகள மீட்டு எடுக்கும் விதமா " பொள்ளாச்சி இலக்கிய வட்டம் குழந்தைகள் கலை கொண்டாட்டம் " நிகழ்ச்சில தொலைந்து போன கிராமத்து விளையாட்டுகள மீட்டு கொடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது.  

   அதுவும் இந்த வருஷம் , பொம்மலாட்டம் நிகழ்ச்சி சூப்பர் ..! 

    குழந்தைகள் பெரியவங்கன்னு சுமார் 300 பேர் வந்தாங்க .. தோழர் பூபாலன், அவர்கள்  வீட்ல எல்லோருக்கும் சமச்சு எடுத்துட்டு வந்திருந்தாரு  . பூபாலன் துணைவியார் அவர்கள் , சாப்பாடு நல்லா  இருக்கானு சந்தோசமா  கேட்ட போது , சமூகத்திற்காக இவர்களின் உழைப்பும் , அர்பணிப்பு உணர்வும் ஆழமாக உணரப்படுகிறது.  வாழ்த்துக்கள் ங்க :-) 









பழமையை மீட்டு எடுப்போம் ...
நன்றிகள் 

இவண் 
செந்தில்பாலாஜி ..

0 comments:

Post a Comment