Friday 26 February 2016

முதல் கவிதை..



முதல் கவிதை..
முதல் மழைத் துளியில்
நனைந்த மண்துகளுக்கும்,
முதன் முதலில்
காதலை உணர்ந்த
அந்த இதயங்களுக்கும்,
குழந்தையை பெற்றெடுத்த
தருணத்தில்
ஒவ்வொரு தாய்க்கும்,
கணவனை இழந்த
பொழுதுகளில்
ஒவ்வொரு கைம்பெண்
விரல்களிலும்,
விரல்கள் சிவக்கும்
வறுமையின்
நொடிகளிலும்,
முதல் முத்தத்துக்கு
பின் உள்ள
சுவாசங்களின்
தூரல்களிலும்,
ஒரு கவிதை
"முதல் கவிதையாய்"
ஒவ்வொருவரிடத்திலும்...
By
SenthilBalaji..

0 comments:

Post a Comment