Friday 26 February 2016

மனையாளிக்கு... நிஜம் ..

தங்கத் தராசில்
கரம் மாறுகிறது
கார்த்திகைப் பெண்,
கைநழுவலில்
விக்கி நிற்கும்
பிறந்த வீட்டின்
சுதந்திரமும்,
நீர் துளியில்
நிரம்பி நிற்கும்
கண்களும்,
புகும் வீட்டுக்கு
கைகொடுக்கும்
தருணத்தை
ஏனோ தாமதிக்கின்றது.
வெண்ணிற சிதறுகளில்
செந்நீரின் சேகரிப்பில்
கழியும் அக்கணத்தில்
வெம்பி நிற்கும்
புன்னகைக்கு பின்,
அந்த தங்க தராசின்
கணம் கடினமாய்...
ஒரு கார்த்திகை பெண்ணிற்கு.,
மன்னிக்கவும்
ஒரு மனையாளிக்கு...
நிஜங்களுடன்
செந்தில்பாலாஜி்.

0 comments:

Post a Comment